வடமராட்சி பகுதியில் விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

0

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

துன்னாலை வடக்கு பகுதியில் இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது

கடந்த 25 ஆம் திகதி வீட்டில் தூக்கிட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் குறித்த மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .

நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆதவன் வயது 14 என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.