யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு..!

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த வைபவம் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அ.சிவபாலசுந்தரன் ஒய்வு பெற்றுச் சென்ற நிலையிலேயே பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக இவர் கடமை ஆற்றுவார்.

Comments are closed.