யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் சடலம் மீட்பு!

0

யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் வசித்து வந்த நிலையில் குறித்த நபரின் மகன் இன்று வீட்டிற்கு வந்து வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.