இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01) காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டி பல துண்டுகளாக சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்திற்கு காரணமாக பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![IMG 20240301 WA0115 IMG 20240301 WA0115](https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/IMG-20240301-WA0115.jpg)
![IMG 20240301 WA0110 IMG 20240301 WA0110](https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/IMG-20240301-WA0110.jpg)
![IMG 20240301 WA0114 IMG 20240301 WA0114](https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/IMG-20240301-WA0114.jpg)
![IMG 20240301 WA0112 IMG 20240301 WA0112](https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/IMG-20240301-WA0112.jpg)
![IMG 20240301 WA0111 IMG 20240301 WA0111](https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/IMG-20240301-WA0111.jpg)
![IMG 20240301 WA0113 IMG 20240301 WA0113](https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/IMG-20240301-WA0113.jpg)
Comments are closed.