யாழ் காரைநகரில் காணாமல் போன நாடக கலைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு..!

நேற்று மதியம் முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டுவந்த காரைநகர் மத்தி விக்காவிலை வதிவிடமாகக் கொண்ட  நாடகக் கலைஞர் இத்தினம் தர்மராசா (வயது 65) அகால மரணமடைந்துள்ளார்.

 

நீண்ட நாட்களாக நோயின் பிடியில் அவதியுற்ற அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

 

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று இல்லத்தில் இடம் பெற்று உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.