யாழில் மற்றுமொரு சோகம்-புடவைக்கடை உரிமையாளர் உயிரிழப்பு..!

அன்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர்
உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்கு தாமாந்தோட்டம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற அன்புலன்ஸ் -மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்

யாழ்ப்பாணம் நீயுராகம்ஸ் புடவைக்கடை உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்தபோது எதிரே வந்த அன்புலன்ஸ் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்

சம்பவத்தில் படுகாயமடைந்த நீயுராகம் புடவைக்க்கடை உரிமையாளர் சண்முகதாஸ் தர்மதாஸ் வயது 54 என்ற  குடும்பஸ்தர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்ளைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

 

Comments are closed.