யாழில் ‘பட்டா’ வாகனத்துக்குள் 3 இளைஞர்களுடன் ஆடைகள் அற்ற நிலையில் பிடிபட்ட தாதிய மாணவி!!

0

யாழ் அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வானகம் ஒன்றின் உள்ளே முழு நிர்வாண நிலையில் 23 வயதான தாதிப் பயிற்சி மாணவியும் 3 இளைஞர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்று அதிகாலை 1 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நத்தார் ஆராதனையில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் தமது பகுதிக்கு அண்மையில் வீதி ஓரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் பட்டா வாகனம் ஒன்று நின்றுள்ளதை அவதானித்துள்ளார்கள்.

அந்த வாகனத்துக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் தமது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு குறித்த வாகனத்தை நெருங்கிச் சென்றுள்ளனர்.

வாகனத்தின் உள்ளே நிர்வாண நிலையில் நிறை வெறியில் 3 ஆண்களும் பெண் ஒருவரும் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை ஆடைகளை அணிவிக்கச் செய்த பின் கீழே இறக்கி விசாரணை செய்த போது குறித்த பெண் தாதிப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவி எனவும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

வாகனச் சாரதியும் அவனது இரு நண்பர்களும் யாழ் நகரப்பகுதியில் வாடகை வாகன சேவையில் ஈடுபடுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.