மௌலவிமார்களுக்கான செயலமர்வு.!

0

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயலமர்வொன்று இன்று (01) இடம்பெற்றது.
IMG 20240201 WA0012
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற  செயலமர்வில் அன்றாட வாழ்க்கையின் போது ஏற்படும் உளநெருக்கீடுகள் மற்றும் அவற்றைச் சமாளித்து எவ்வாறு தங்களது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவது என்பது தொடர்பிலும், மாணவர்களுடன் உரையாடும் போதும் கல்வி  நடவடிக்கைகளின் போதும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல விடயங்கள் விரிவுரைகளாக வழங்கப்பட்டன.

குறித்த செயலமர்வுக்கு வளவாளராக மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் கலந்து கொண்டார். இதனை சிறுவர் பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
IMG 20240201 WA0011
இந்தச் செயலமர்வில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.றியால், முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம்.பஸ்மி உட்பட மௌலவிமார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.