மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது !!!

0

தேன் விற்பனையில் ஈடுபடுவது போல திருவிளையாடல் செய்து மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் நேற்றையதினம் (04) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தொண்டமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி, இருவர் தேன் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, மூதாட்டியிடம் தேனை விற்பனை செய்வது போன்று பேச்சுக்கொடுத்து, மூதாட்டி அசந்த நேரம் அவரின் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

தாலிக்கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் மூதாட்டி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் கோண்டாவில் மற்றும் தெல்லிப்பழையை பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 41 வயதானவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.