முதலாளியை போட்டு தள்ளியதாக இரு இளைஞர்கள் கைது..!

0

அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இடம்பெற்றிருக்கிறது பின்னர் நேற்று முழுவதுமாக அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைக்கப்பட்டு நேற்று இரவு அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல வருடங்களாக இருப்பிடம் கொடுத்து அவர்களுக்கு தொழிலும் கொடுத்து அதற்கான ஊதியமும் கொடுத்த சிறந்த ஒரு நல்ல மனிதர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது தெரிய வருகிறது

முதலாளியிடம் இருந்த முதலாளிக்கு சொந்தமான ஆடுகளை திருடி விற்பனை செய்ததன் காரணமாக அதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சடலம் வாங்காமம் பகுதியில் உள்ள கரும்பு காணி ஒன்றினுள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

அம்பாறை நீதிமன்ற நீதவான் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.