மரக்கிளை வீழ்ந்ததால் மாணவன் பலி

0

சிகை அலங்கார கடைக்குச் சென்று கொண்டிருந்த வேளையில், மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 14 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாகப் பலியாகினான். இந்தச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் நேற்றுமுன் தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும் வச்சிகுவோம் முருகன் அஷால் என்ற 14 வயதுடைய மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
IMG 20240205 WA0046

மரக்கிளை வீழ்ந்ததும் அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கோண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். மாணவனின் உடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடற் கூற்று பரிசோதனையை, சிறுவனின் தந்தை முருகன் முன்னிலையில் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இன்று மேற்கொள்ள உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.