இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
பெளர்ணமி விடுமுறை தினத்தில் அரச சாரயத்தை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 180 மில்லி மற்றும் 750 மில்லி மதுபானம் கொண்ட 102 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாநகர் மடத்தடிப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 36 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்