இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக கொமர்சல் வங்கியின் “அனகி” செயற்றிட்டத்திற்கு அமைய இன்றைய தினம் பெண்களுக்கான இலவசமாக மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.
திருநெல்வேலி கொமர்சல் வங்கி முகாமையாளரின் நெறிப்படுத்தலில் ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இலவச மருத்துவ பரிசோதனையின்போது குருதி அமுக்கம், பி.எம்.ஐ அளவு, இரத்தப் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்பட்டன.
வங்கி கிளை மற்றும் ஏ.ரி.எம் சேவையினை பெறுவதற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் இந்த இலவச பரிசோதனையினால் நன்மையடைந்தனர். இதற்கு டேடன்ஸ் மருத்து பரிசோதனை நிலையமும் அனுசரணை வழங்கியிருந்தது. இதில் சுமார் 127 பேர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.