இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
சிறிலங்காவின் 76ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அதற்கு மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலர் பிரதீப் யசரத்ன நேற்றுத் தெரிவித்தார். எனவே எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை சுதந்திரதினம் வருவதால், அதற்கடுத்த நாள் திங்கட்கிழமையை அரசாங்கம் விடுமுறையாகப் பிரகடனம் செய்யவேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்த நிலையிலேயே பொது நிர்வாக அமைச்சின் செயலர் இவ்வாறு அறிவித்துள்ளார்.