இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் செல்கின்றனர். ‘எட்கா’ உடன்படிக்கையை நிறைவேற்ற மீண்டும் தயாராகிவரும் நிலையில், அதற்கு ஆதரவு கேட்கவே அநுரகுமாரவை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்தியாவிற்குச் செல்கின்றனர்.