கெஹலியவுக்கு விளக்கமறியல்.!

0

முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்துக் கொள்வனவு மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் நேற்று 10 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.