குளவி கொட்டியதில் ஐந்து பெண்களுக்கு பாதிப்பு

0

குளவிகள் திடீரெனக் கொட்டியதில் தேயிலை பறிக்கச் சென்ற பெண்கள் ஐந்துபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வழக்கம்போல குறித்த தோட்டத்தில் தேயிலைக் கொழுந்துகளைப் பெண்கள் பறித்துக் கொண்டிருந்தபோதே, திடீரென வந்த குளவிகள் அவர்களைக் கொட்டி காயப்படுத்தின. உடனடியாகவே பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும் லிந்துல பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.