இரவிரவாக கஞ்சா அடித்து மனைவியின் தங்கையை பிரித்து மேயும் யாழ்ப்பாண டொக்டர்!! மனைவியின் தங்கை அவசர சிகிச்சையில்!

0

யாழ் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் பெண் ஒருவர், கருக்கலைப்பின் போது கடுமையான இரத்தப் போக்கு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழில் அரச வைத்தியராக கடமையாற்றுபவரின் மனைவியின் தங்கையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியரே தனது வாகனத்தில் கொண்டு வந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். குறித்த தனியார் வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணிகளைப் பார்வையிடும் மகப்பேற்று வைத்தியர் ஒருவரின் நண்பனே இவ்வாறு தனது மனைவியின் தங்கையை அனுமதித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் அனுமதி எடுக்காமலேயே நேரடியாக குறித்த வைத்தியர் சிகிச்சை செய்யும் அறைக்கு குறித்த யுவதியை கொண்டு சென்றுள்ளார்.

அவர் அங்கு சென்று சில நிமிடங்களிலேயே மகப்பேற்று நிபுணரும் அங்கு வந்து சிகிச்சை அறைக்குள் நுழைந்துள்ளார். அதன் பின்னர் யுவதியை அழைத்து வந்த டொக்டர் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரியவருகின்றது.

தற்போது குறித்த வைத்தியசாலையின் விசேட பிரிவில் யுவதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைத்தியர் வீட்டில் வைத்தே கருக்கலைப்பை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு மேற்கொண்ட போது குறித்த யுவதிக்கு கடும் இரத்தப் போக்கு ஏற்பட்டு சோர்வடைந்ததால் பயத்தின் காரணமாக யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் வைத்தியர்.

இதே வேளை குறித்த வைத்தியர் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் கஞ்சா விற்கும் காவாலிகள் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான வாள்வெட்டு காவாலிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுபவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவியுடன் பல தடவைகள் முரண்பட்டு பிரிந்து வாழ்வதும் மீண்டும் சேர்ந்து வாழ்வதுமாக இருந்தவர் என்பதுடன் வைத்தியசாலையில் இரவு நேரப் பணி என மனைவிக்கு தெரிவித்துவிட்டு மனைவியின் தாயுடன் தனித்திருந்த குறித்த பெண் உத்தியோகத்தரின் வீட்டில் சென்று தங்குபவர் எனவும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.