இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று (07.03.2024) வியாழன் இருவர் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக வெற்றிலைக்கேணி கடற்படை வடமராட்சி கடற்பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது
இதன் விரிவாக்கமாக கடந்த வியாழக்கிழமை காலை ஆழியவளை கடற்பகுதியில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்களது உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தாளையடி நீரியல்வளத்திணைக்கள உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Comments are closed.