Browsing: செய்திகள்

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது நொதேண் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு […]

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் அவர்களுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து மு.கோமகன் அவர்கள் தெரிவிக்கையில், எனக்கு வழக்கிற்கு வருமாறு இதுவரை எந்தவிதமான அழைப்பாணையும் வழங்கப்படவில்லை. ஆனால் எனக்கு […]

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல் தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2050 ஆண்டளவில் இந்தியாஇ இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவேஇ அதற்கான சந்தர்ப்பத்தை […]

இந்தியாவின் நாகப்பட்டினத்தையும் திருகோணமலை எண்ணெய்க் குதத்தையும் இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி வாரத்தினை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தேச எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் நேற்று முன்தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய அரசாங்கம் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளது என எரிசக்தி அமைச்சர் […]

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்று கேரளா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவை சந்தித்துள்ளனர். மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஐந்து நாள்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்றைய இறுதி நாளில் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிலவும் கேரளாவிற்கு சென்றிருந்தனர். இதன்போதுஇ தொழில் மற்றும் சட்டம் தொடர்பிலான அமைச்சர் பி.ராஜிவினை சந்தித்துள்ளனர்.

விவசாயத் திணைக்களம் அதிக பருவத்தில் அரசினால் நெல் கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச விலையை வழங்கியுள்ளது. மேலும் 14 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.105 ஆகவும், சம்பா அரிசி கிலோ ரூ.120 ஆகவும், கீரி சம்பா அரிசி கிலோ ரூ.130 ஆகவும் குறைந்தபட்ச விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் கூற்றுப்படி, 14 சதவீத ஈரப்பதத்திற்கு மேல் உள்ள நாட்டு அரிசியின் குறைந்தபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.90 ஆகவும், சம்பா நெல் ஒரு கிலோவுக்கு […]

வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் அந்தரிப்பிற்குள்ளாகினர். வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு இறப்பு திருமணச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக இன்றையதினம் பொதுமக்கள் சென்றிருந்தனர். காலை 9 மணிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் மாலை 3 மணிவரை பொதுமக்கள் காக்க வைக்கப்பட்ட போதிலும் பலருக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகினர். அவசரத் தேவை நிமித்தம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தோம் எனினும் […]

காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ”காசாவில் உள்ள ஒவ்வொரு நபரும் இப்போது பசியுடன் உள்ளனர், மேலும் மக்கள் தங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் பாதுகாப்பற்ற தண்ணீரைக் கொண்டுள்ளனர்” என்று ஆக்ஷன் எய்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரஃபாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்துவது ” பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துளளது. ஆக்‌ஷன் எய்ட் பாலஸ்தீனத்தின் […]

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆலயத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு தொகுதி மரக்கன்றுகள் இன்று(9) .மாலை 4.00 மணியளவில் நாட்டப்பட்டது. காசி விநாயகர் ஆலய தொண்டர்களும் ; தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை சிறுவர்களும் இணைந்து இம் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.தினசரி வெள்ளிக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அதனுடன் இணைந்த வகையில் சமுகப் பற்றையும் ஏற்படுத்துமுகமாகவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் சகாயங்களுக்குள்ளாகியுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இன்று மதியம் இடம்பெற்றது. துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக […]