28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் கோர விபத்து : ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிள் சாரதியின் கால் , மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு , பாதம் துண்டாடப்பட்டுள்ளது

விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், துண்டாடப்பட்ட பாதத்தினையும் மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பதுளை – பசறை பிரதான வீதியில் விபத்து

User1

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

User1

பொலன்னறுவை கல் விகாரையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு !

User1

Leave a Comment