28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலி: சாரதி தலைமறைவு

யக்கல – கம்பஹா வீதியில் யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) கம்பஹாவில் இருந்து யக்கலை நோக்கி பயணித்த வான் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தையடுத்து வான் சாரதி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நண்பர்களுடன் நீராட சென்ற இளம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்..!

sumi

உயிருக்காகப் போராடும் யானை : காப்பாற்ற தீவிர முயற்சி

User1

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

User1

Leave a Comment