27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

நன்னேரியாவில் பெண் கொலை ; சந்தேக நபர் கைது

நன்னேரியா பயிரிக்குளம்  பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

பயிரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நன்னேரியா பயிரிக்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து சொத்துக்களை திருட முயன்றுள்ளார்.

இதன்போது, இந்த வீட்டின் பெண் உரிமையாளர் திடீரென வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபர் இந்த வீட்டின் பெண் உரிமையாளரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

62 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நன்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் !

User1

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

User1

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் 

User1

Leave a Comment