27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலி

நேற்று இரவு வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொழில் நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த பாஸ்கரன் என்ற 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதினைந்து பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இரவு பிறந்தநாள் விழாவின் போதே இத் துயரம் நிகழ்ந்துள்ளது.

நீரில் மூழ்கிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்ளிட்ட சிலர் கடலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் மத்தியில் இந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கல்!

User1

குறையவுள்ள வற்வரி-நாட்டு மக்களுக்கு வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!

sumi

பதுளையில் துப்பாக்கிசூடு : கர்ப்பவதி படுகாயம்

User1

Leave a Comment