27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பூநகரி மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நேற்றைய தினம் (27)நடைபெற்ற இச்சந்திப்பில், பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், மேனாள் உபதவிசாளர் முடியப்பு எமிலியாம்பிள்ளை, பூநகரி பிரதேச சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பூநகரி பிரதேச மக்களின் உடனடித் தேவைப்பாடுகள், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், அதுசார்ந்த மக்களின் எதிர்பார்ப்புகள் என்பவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக, எதிர்வரும் செப்ரெம்பர் 21ம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தோர்தல் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பதிலளித்திருந்தார்.

Related posts

வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

User1

12 வயது மாணவனை பலி எடுத்த கென்டர்!! அதிர்சி வீடியோ வெளியானது!

sumi

இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்!

sumi

Leave a Comment