• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபாய நிலையில்…..

admin by admin
August 28, 2024
in இலங்கை செய்திகள்., மலையக செய்திகள்
0
லிந்துலை பிரதேச வைத்தியசாலை அபாய நிலையில்…..
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய சிகிச்சை காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம் தற்போது பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாகவே இக்கட்டித்திடத்திற்கு பின்னால் இருக்கும் மலையில் இருந்து கற்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் கட்டிடத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பும் இவ்வாறு கற்கள் சரிந்து விழுந்ததன் காரணமாக குறித்த காரியாலயத்தில் இருந்து தமது சேவைகளை தொடர்வதில் அச்சம் நிலவியதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமது பிரதேசத்தில் 90 ஆயிரம் மக்கள் இருப்பதோடு மாத்திரமல்லாது தமது நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் 72 பாடசாலைகளைச் சேர்ந்த 14000 மாணவர்களும் 600 கர்ப்பிணித் தாய்மாரும் 3000க்கும் மேற்பட்ட 5 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் வாழ்ந்து வருவதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. ரேஷ்னி துரைராஜ் தெரிவித்தார்.

இவர்களுள் குறிப்பாக தமது சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு வாராந்தம் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்கள் வந்து செல்வதோடு மாத்திரமல்லாது பிரதேச மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாகவே இந்த கட்டிடம் விளங்குகிறது என பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இப்பிரதேசம் NBRO பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கையின் பிரகாரம் குறித்த இடத்தில் அனர்த்தம் இருப்பதன் காரணமாக உடனடியாக அவ்விடத்தை விட்டு பிரிதொரு இடத்திற்கு காரியாலயத்தை கொண்டு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்திருந்தது.

அதற்கு அமைய இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பழைய கட்டிடம் மற்றும் லெம்லியர் தோட்ட Circuit bangalow ஆகிய கட்டிடங்களை தமக்கு பெற்றுத் தருமாறு இலங்கை மின்சார சபை மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும் குறித்த கட்டிடங்களில் ஒன்று கூட தமக்கு தமது சேவைகளை தொடர்ச்சியாக தடையின்றி கொண்டு செல்வதற்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து லிந்துலை பிரதேச வைத்திய சாலையின் ஒரு பகுதியில் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தற்காலிகமாக முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரி அனுமதி வழங்கியிருந்தார் இருப்பினும் பழைய கட்டிடத்திலேயே அலுவலக செயற்பாடுகள் இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இவ்வாறான சூழலில் கடந்த ஒரு தினங்களாக மீண்டும் கற்கள் சரிந்து வந்ததன் காரணமாக தமது சேவைகளை தொடர்ச்சியாக அங்கிருந்து முன்னெடுப்பதில் பாரிய அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்து இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் லிந்துலை பொது சுகாதார வைத்திய நிலையமமானது தற்காலிகமாக லிந்துலை பிரதேச வைத்திய சாலையில் தொடர்ச்சியாக இயங்குவதற்கான அனுமதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

குறித்த நிலையத்தை நிரந்தரமாக வேறொரு இடத்திற்கு துரித கதியில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை குறித்து அதிகாரி முன்னெடுப்பதாகவும் அதுவரை தற்காலிகமாக மக்களுக்கான சேவைகளை பிரதேச வைத்தியசாலையில் இருந்து வழங்குமாறு அறிவித்துள்ளார்.

குறித்த பொது சுகாதார வைத்திய நிலையத்திற்கான கட்டிடம் நிரந்தரமாக கிடைக்கும் பட்சத்தில் அதனை முன் கொண்டு நடத்துவதற்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குமாக அரசாங்கத்தினால் ஒரு தெகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

எனவே குறித்த நிலையத்திற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள லெம்லியர் தோட்ட தேயிலல தொழிற்சாலையை அல்லது வோல்ட் ரீம் தோட்ட முகாமையாளர் விடுதியை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Posts

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

by Mathavi
June 24, 2026
0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது...

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சித் திறனை மேம்படுத்துவதற்கும், வான்படைச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச். 57 'சீ ரேஞ்சர்' ரக...

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

by Mathavi
June 24, 2026
0

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்குத் தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது...

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், தமிழ் மக்களுக்கு எதிராகக் காலம் காலமாக அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் சர்வதேச ரீதியில்...

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 3 சிறுவர்களுடையது உட்பட ஒரே நாளில் மிக அதிகளவாக 19 மனித...

எவ்வித நட்டமும் இன்றி பெற்றோலை 125 ரூபாவாலும், டீசலை 110 ரூபாவாலும் குறைக்க முடியும்.!

எவ்வித நட்டமும் இன்றி பெற்றோலை 125 ரூபாவாலும், டீசலை 110 ரூபாவாலும் குறைக்க முடியும்.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கையில் தற்போதைய சூழலில் எவ்வித நட்டமும் இன்றி பெற்றோல் விலையை 125 ரூபாவாலும், டீசல் விலையை 110 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள்...

டெங்கு அதி அவதான வலயங்களின் பட்டியல் வெளியானது!

டெங்கு அதி அவதான வலயங்களின் பட்டியல் வெளியானது!

by selvan
June 24, 2026
0

நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக...

GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

by selvan
June 23, 2026
0

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான...

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

by selvan
June 23, 2026
0

2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மதுவரி திணைக்களத்தின்...

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் இன்றும் சம்பு புற்  தரவைக்கு விஷமிகள் தீ வைத்தனர்!

by selvan
June 23, 2026
0

யாழ் - பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற்  தரவைக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் உருவான கரும்புகையால் சில நிமிடங்கள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி