28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் பசுமாட்டை திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

சுமார் 05 இலட்ச ரூபா பெறுமதியான பசு மாடு ஒன்று திருடப்பட்டுள்ளதாக  பாதிக்கப்பட்டவரால்,  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.  

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்செழு பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தன் அடிப்படையில் திருடப்பட்ட பசு மாடு மீட்கப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Related posts

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

User1

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!

sumi

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு

sumi

Leave a Comment