28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பகுதியில் சடலம் ஒன்று மீட்பு

இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அருகில் இறந்த நிலையில் சடலம் ஒன்று மஸ்கெலியா பொலிஸார் மீட்டு உள்ளனர்.

இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண பட்டது என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

முகம் பார்க்க முடியாதபடி கழிவு நீர் செல்லும் வடிகாலில் விழுந்து இறந்து நிலையில் காணப்பட்ட சடலம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட கங்கேவத்தை பிரிவில் வசிக்கும் சேவி மாரி வயது 47 என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு ஹட்டன் வலய தடையகவியல் பொலிசார் வந்து பரிசோதனை மேற் கொண்டு வருகின்றனர்.

சடலம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வேலி போடப்பட்டு உள்ளது.


அப் பகுதிக்கு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய போர் கப்பல் நாட்டை விட்டுச் சென்றது

User1

வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு !

User1

சரணடைந்த புலிகள் எங்கே? நீதிமன்றுக்கு போகும் இராணுவம்

sumi

Leave a Comment