27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சி கண்ணாபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளின் மற்றுமொரு செயற்பாடாக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து குறித்த பகுதி மக்கள்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றினகளை தெரிவித்துள்ளனர்.

குன்றும் குழியுமாக இருந்த குறித்த வீதியானது அப்பகுதி மக்களின் போக்குவரத்தில் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை கொடுத்துவந்த நிலையில் அந்த வீதியை புனரமைத்துக் கொள்வதில் மக்கள் பெரும் சவாலையும் தட்டிக்களிப்மையும் எதிர்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் கடந்த 20-07-2024 திகதியன்று கண்ணாபுரம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்துகொண்டார். இதன்போது கண்ணாபுரம் பிரதேச மக்களால் தமது பிரதேசத்தின் வீதியை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மக்களின் அவசிய தேவையாக இருந்து குறித்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா 60 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்த கண்ணாபுரம் வீதி விரைவாக புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியின் பயனாக ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், அக்கராயன், கோணாவில், ஆனைவிழுந்தான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த காணிகளற்ற குடும்பங்களுக்கு குறித்த பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக ஸ்கந்தபுரத்திலுள்ள கரும்புகுத்தோட்ட காணி உரிமையாளர்களின் நலன்கருதி கட்சி நிதியிலிருந்து 15 இலட்சம் ரூபாய் நிதியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வழங்கியிருந்தார்.

விவசாயம், கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை உற்பத்திகளை விருத்தி செய்து சுய பொருளாதாரத்தில் மக்களை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட விவசாய அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த மதில்கள் இடித்து அகற்றப்பட்டது. 

User1

சட்டவிரோதமாக பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

sumi

பொன்சேகா இராஜினாமா!

User1

Leave a Comment