27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட 11 சிறுமியர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 50 வயதான விவசாயி என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவசாயி, கபுகொல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 3 சிறுமியரை ஓராண்டு காலமாக பாரதூரமான முறையில் தகாத செயற்பாடுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய விவசாயி குறித்த சிறுமியரின் குடும்ப உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்புறுபிட்டி, ஹுங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹுங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும்  சிறுவர்கள் தொடர்பான இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடமையிலிருந்த இராணுவ வீரர் எடுத்த தவறான முடிவு!

User1

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி !

User1

மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்தவர் உயிரிழப்பு!

User1

Leave a Comment