சட்டத்தால் பிரகடணம் செய்யப்பட்ட ‘உயர் பாதுகாப்பு வலயம்’ அல்ல. மாலை 6 மணியிலிருந்து காலை 5 மணி வரை இதை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது?
யாழ் – பலாலி பிராதான வீதி திறந்து விடப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எம்.ஏ. சுமந்திரன் எழுப்பியுள்ள கேள்வி.
யாழ்- பலாலி பிரதான வீதி கடந்த 35து ஆண்டுகளாக பாதுகாப்புக் காரணங்களுக்காக பகுதி அளவில் மூடப்பட்டிருந்தது. குறித்த வீதி இன்று (10) காலை பல நிபந்தனைகளுடன் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
குறித்த வீதி திறந்து விடப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தனது முகநூல்ப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவையாவன:-
சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட ‘உயர் பாதுகாப்பு வலயம்’ அல்ல. மாலை 6 மணியிலிருந்து காலை 5 மணி வரை இதை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது?
கட்டுப்பாடுகளுடனாவது பாதை திறக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
ஆனால், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதாக வாக்களித்தவர்கள் சட்டவிரோதமான கட்டுப்பாடுகளை விதிக்கலாமா?
இது சட்டத்தால் பிரகடனம் செய்யப்பட்ட ‘உயர் பாதுகாப்பு வலயம்’ அல்ல. மாலை 6 மணியிலிருந்து காலை 5 மணி வரை இதை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும் எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது?
அதைவிட முக்கியமான கேள்வி:
தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும்தான் பாதைகளைத் திறப்பீர்களா? என எம். ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.