27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிழக்கு ஆளுனர் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கவும், திருக்கோணேஸ்வர விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் 

கிழக்கு ஆளுனர் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கவும், திருக்கோணேஸ்வர  விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் -நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

திருகோணமலையில் திருக்கோனேச்சரத்தின் விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிருவாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் அப்பட்டமான விடயங்களை கூறி பேரினவாத சக்திகளுக்கும் திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் தலையிட வேண்டாம். தமிழ் மக்களின் இறுப்பை பாதுகாருங்கள் மக்கள் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளைகளையும்அமைக்கின்றனர் இதனை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கும் கிழக்கு ஆளுனர் இவ் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நிருவாக சபை அதற்குதான் உள்ளது என்றார்

Related posts

மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷுக்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் – அகிலவிராஜ்

User1

இன்றைய நாணய மாற்றுவீதம்

User1

வாக்காளர் பதிவை உடன் மேற்கொள்க!

sumi

Leave a Comment