27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

முருங்கை செய்கையாளர்கள் முருங்கையின் விலை இன்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தநாறு மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்

அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கு என கொள்ளளவு செய்யப்படுவதாகவும் தற்பொழுது முருங்கை செய்கையின் அனேகமான விவசாயிகள் தற்பொழு முருங்கை செய்கை அறுவடையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் முருங்கைக்காய்க்கு உரிய விலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடமும் இதே போன்றும் முருங்கை செய்கையாளர்கள்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் குரங்கு காவல் யணைக்காவல் என இரவு பகல் என பாடுபட்டு எந்த பயனுமற்றுப்போயுள்ளதாவும் அதே போன்று இவரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அறுவடைக்கு தயாராக உள்ள முருங்கை இனை அறுவடை செய்ய முடியாது கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏனெனில் அறுவடை செய்யும் பொழுது அதற்கான கூலி பணத்தை கூட பெற முடியாத நிலையில் முருங்கச் செய்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது பகுதியில் நூற்றுக்கும் அதிகமான முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்கத்தினால் எமக்கொரு உரிய விலையினை பெற்றுத்தர வேண்டும் எனவும் அப்படி பெற்றுத் தர முன்வராத பட்சத்தில் தாம் முருங்கச் செய்கையில் இருந்து முற்று முழுதாக விடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் முருங்கை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது பகுதியில் உள்ள முருங்கைச் செய்கையாளரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எமது பகுதி விவசாயிகளுக்கு உரிய விலையினை பெற்று தர வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளார்

Related posts

கெஹலியவுக்கு விளக்கமறியல்.!

sumi

சிறுமி வன்புணர்வு; சந்தேகநபர் தற்கொலை

sumi

யாழ் கோர விபத்து இணுவில் மக்கள் விடுத்த கோரிக்கை..!{படங்கள்}

sumi

Leave a Comment