27.9 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை இன்று (02.02.2014) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் 21கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞனை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசுவமடு- ரெட்பானா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
-பாலநாதன் சதீஸ்-

Related posts

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள்- முல்லையில் முன்னணி ஆர்ப்பாட்டம்.!

sumi

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!!!

sumi

கிளிநொச்சியில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வெஸ்லியன் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் வீதி நாடகம்!

User1

Leave a Comment