29.1 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து; சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் காயம்

மிதிகம ரயில் கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ரயில், கார் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் ஒன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணித்துள்ளனர். இச் சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் செல்வதற்கான சமிஞ்சை போடப்பட்டிருந்த நிலையில், இந்த கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும்  மக்கள்.!

sumi

நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன !

User1

களுவாஞ்சிக்குடி நீதிமன்றிற்கு வழக்கிற்காக அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்

User1

Leave a Comment