28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி..!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்த வேளை இரவு 10.00 மணியளவில் மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

முகாமையாளரின் தாக்குதலில் சீவல் தொழிலாளி உயிரிழப்பு!

sumi

கதிர்காமத்தில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு விளக்கமறியல்!

User1

புதினம் தெரியுமோ? டெங்குக் காய்ச்சலை மாத்தவெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனால்..

sumi

Leave a Comment