உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நடுவீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

க்ரைம் ஸ்டோரி 3 ஆண்டுகள் முன்
24 பார்வைகள்

கொழும்பு- மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

க்ரைம் ஸ்டோரி

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் கீப்பர் பெட்ஸ்மேனுமான சர்பராஸ் கான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை…

35 0 0
க்ரைம் ஸ்டோரி

தேசிய வைத்திய சாலையில் காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு!

அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன…

23 0 0
க்ரைம் ஸ்டோரி

பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதியினர் கைது

பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதி ஒன்று ராகம பிரதேசத்தில் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

22 0 0
க்ரைம் ஸ்டோரி

திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸார் மீட்பு

நுகேகொடையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிலிருந்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் ஒருவரின் கைது மூலம் குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதோடு,…

26 0 0