யாழ். குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ‘செல்வா பிரீமியர் லீக் – 03’ (SPL-03) கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை 9.30 மணியளவில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகின.
செல்வா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. நிதேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றப்பட்டு போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
செல்வா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. நிதேசன், செயலாளர் திரு. தாசி, பொருளாளர் திரு. மதுசன் மற்றும் புலம்பெயர் உறவான திரு. கோகுலதாசன் ஆகியோர் இணைந்து மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.
மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து, செல்வா விளையாட்டுக்கழகத்தின் உத்தியோகபூர்வக் கொடியினை கழகத்தின் தலைவர் திரு. நிதேசன் அவர்கள் பெருமிதத்துடன் ஏற்றி வைத்தார்.
தேசியக் கொடி மற்றும் கழகக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, வீரர்களுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகின. இந்தத் தொடக்க விழாவில் பெருமளவிலான விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடாத்தப்படும் இத்தொடர், குடத்தனை பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










