சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என,இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரம் தெரிவித்துள்ளார்.
நாகர் கோவிலில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை தமிழரசு கட்சி ஒற்றைய ஆட்சியை வன்மையாக எதிர்க்கின்ற ஒரு கட்சி. தமிழரசு கட்சி உருவாக்க பட்டதே ஒற்றை ஆட்சிக்கு எதிராக சமஸ்டிக்காக, இலங்கை தமிழரசு கட்சி உருவாக்க பட்டதே சமஷ்டி கோரிக்கைக்காக.
தமிழரசு கடைசியை சமட்டி கட்சி சமட்டி கட்சி என்று கேலி செய்தவர்கள் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.
1971 ஆம் ஆண்டு ஜீ.ஜி பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.
அவருடைய கட்சியாளரான தியாகராசா பேசுகிறபோது குறிப்பிட்டார் எமது தலைவர் இருந்திருந்தால் சமஷ்டி கோரிக்கை எவ்வளவு மோசமானது என்பதை என்னை விட மிகத் திறமையாக பேசி இருப்பார் என்று பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கின்றார்.
ஆகவே சமஸ்டியை மிக மோசமாக விமர்சித்தவர்கள் இன்றைக்கு தங்கள்தான் அதை உருவாக்கியவர்கள் போல மக்களை பிழையாக வழி நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
எங்களுடைய கட்சியினுடைய முழுமையான கொள்கையே சமஷ்டி ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டும் என்பது
பெயர் பலகைகளிலே நாங்கள் தொங்கிக்கொண்டு இருக்கவில்லை.
எக்கிய என்ற சொல்லிற்கு அர்த்தம் ஒன்று ராஜ்ய என்ற சொல்லுக்கு அர்த்தம் நாடு. ரஜ்ய என்று சொன்னால் ஆட்சி முறை. இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்பிலே சொல்லப்பட்டிருப்பது எக்கிய ராஜ்ய அது ஒற்றை ஆட்சி என்பதாகும்.
அது கடந்த காலத்திலே செய்யப்பட்ட வரைவிலே எக்கிய ராஜ்ய என்று மாற்றப்பட்டது அதாவது ஒரு நாடு என்று. இது ரஜயா, ராஜ்ய என்ற சத்தம் தமிழ் மக்களுக்கு புரியாமல் இருந்தாலும் தமிழை விட சிங்களம் கூடுதலாகவே தெரிந்திருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு இது நன்றாகவே தெரியும்
ஒற்றையாட்சி என்ற பதத்திலிருந்து ஒருமித்த நாடு என்று மாற்றப்பட்டது எங்கள் எல்லோரையும் விட கஜேந்திர குமாருக்கு நன்றாகவே தெரியும்.
இவர் தொடர்ச்சியாக மக்களைப் பிழையாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் என்றார்.










