• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்

selvan by selvan
June 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
Share on FacebookShare on Twitter



கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சட்டவாச்சியை மீறும் செயலென இலங்கை நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடலோரப் பகுதி அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி கொண்டுவரப்பட்டுள்ள இந்த விசேட பொறிமுறையானது, சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான நடவடிக்கை என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை இந்த முடிவு அப்பட்டமாக மீறுவதாகத் தெரிவித்து, இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு மிக அவசரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், இந்த சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாகக் கைவிடுமாறு அல்லது இடைநிறுத்துமாறு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

காணி ஆக்கிரமிப்புகளும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் பிரத்தியேகமான பிரச்சினைகள் அல்ல எனவும், தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு தேசியப் பிரச்சினையாகும் எனவும் நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய மாகாணங்களை விடுத்து, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பல்லின சமூகமாக வாழும், யுத்தத்திற்குப் பின்னரான காணி இழப்புகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மட்டும் இவ்வாறு அதிகாரம் வாய்ந்த விசேட குழுவினை நிறுவுவது  மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கும்.

இன, மத, பிராந்திய பாகுபாடுகளின்றி சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் மிகத் தெளிவாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் , இந்த தனியொரு மாகாண பொறிமுறையானது அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் முரணானது என சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.

மேலும், காணி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கவும் 1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரசு நிலங்கள் (பொறுப்பேற்பு மீட்பு) சட்டம் (State Lands (Recovery of Possession) Act No. 07 of 1979) அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம்,  மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் என இலங்கையில் ஏற்கனவே போதுமான மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் காணப்படுகின்றன.

மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தற்போதிருக்கும் சட்டங்களைக் கொண்டே, பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸார் ஊடாகத் தீர்க்க முடியும் எனும் போது, புதிய குழுக்களை எதற்காக என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்து.

தற்போது இலங்கைக்குத் தேவைப்படுவது நாட்டிலுள்ள தற்போதைய சட்டங்களை ஒன்பது மாகாணங்களுக்கும் பாரபட்சமின்றி, சமமாக அமல்படுத்துவதற்கான அரசியல் விருப்பம் (Political Will) மட்டுமே ஆகும் என்றும் இலங்கை நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஜூன் 22 அன்று எடுக்கப்பட்ட இந்த அமைச்சரவை முடிவை உடனடியாக நிறுத்தி வைத்து, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொது மக்கள் ஆலோசனைகளை நடத்துமாறும், சட்டத்தை நாடு முழுவதற்கும் பொதுவானதாக சமத்துவத்தின் அடிப்படையில் அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இலங்கை நீதிக்கான மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

by selvan
June 30, 2026
0

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன்,...

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

by selvan
June 30, 2026
0

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள்...

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

by selvan
June 30, 2026
0

வவுனியா வடக்கு - நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 29.06.2026இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். குறிப்பாக இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த...

IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

by selvan
June 30, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.ஜூன் 24 முதல் 30 வரை...

புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நன்கு மாணவர்கள் பலி!

புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நன்கு மாணவர்கள் பலி!

by selvan
June 30, 2026
0

புத்தளம் - வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு மாணவர்களும் தோணியில் தாமரை மலர்களைப் பறிக்கச்...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!

by selvan
June 30, 2026
0

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்...

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

by selvan
June 30, 2026
0

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து...

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

by selvan
June 30, 2026
0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொ*லைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர். அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும்...

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

by selvan
June 30, 2026
0

"மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மாத்திரமல்ல சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பு" என 'தினக்குரல்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார். காலமான...

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூகமான சமரசத்துக்கு வருவதே ஒரே தீர்வு என்று நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி