உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

‘டித்வா’ புயல் பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்க தீவிரம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

‘டித்வா’ சூறாவளியால் நாட்டின் கல்வித்துறைக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக யுனிசெப் அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது, “டித்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி – ஏப்ரல் 2026)” என்ற உத்தியோகபூர்வ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய செயற்பாடுகளைத் தேசிய மட்டத்தில் விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான ஆரம்பக் கட்ட மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்களை இருதரப்பும் இணைந்து மீளாய்வு செய்ததுடன், அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு ஆதரவுகளை வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் இடைவிடாத தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்தல், அனர்த்தத்தால் உளவியல் ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் பிரதமரும் யுனிசெப் பிரதிநிதிகளும் முக்கிய கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்த உயர்மட்டச் சந்திப்பில், யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி எம்மா பிரிகாம், யுனிசெப் பிரதிநிதி பெகோனா அரேலானோ உள்ளிட்ட யுனிசெப் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0