• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

Mathavi by Mathavi
June 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்து 144 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நடப்பு ஜூன் மாதத்தின் கடந்த 13ஆம் திகதி வரையிலான குறுகிய நாட்களுக்குள் மட்டும் சுமார் 7 ஆயிரத்து 302 டெங்கு நோயாளர்கள் புதிதாகப் பதிவாகியுள்ளனர்.

தற்போது ஆரம்பித்துள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் சடுதியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

டெங்கு பரவலின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் 89 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ‘அதி உயர் டெங்கு அபாயம் மிக்க வலயங்களாகவும்’, 1,185 பிரிவுகள் சராசரி பாதிப்பைக் கொண்டுள்ள பகுதிகளாகவும் சுகாதாரத் துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை பதிவாகியுள்ள 24 மரணங்களின் அடிப்படையில், டெங்கு மரணங்களின் வீதம் 0.06 சதவீதமாக உயர்வடைந்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக,

  • கொழும்பு – 8,686 நோயாளர்கள்
  • கம்பஹா – 7,263 நோயாளர்கள்
  • மாத்தறை – 2,986 நோயாளர்கள்
  • இரத்தினபுரி – 2,874 நோயாளர்கள்
  • களுத்துறை – 2,718 நோயாளர்கள்
  • காலி – 2,519 நோயாளர்கள்
  • கண்டி – 2,202 நோயாளர்கள்

மேற்படி மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் இந்த டெங்கு ஆபத்து நிலைமையைக் கருத்திற்கொண்டு, தாங்கள் வாழும் வீடு மற்றும் வேலைத்தளச் சூழலில் டெங்கு பரப்பக்கூடிய நுளம்புப் பெருக்க இடங்களை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக இல்லாதொழித்துச் சூழலைத் தூய்மையாகப் பேணுமாறு சுகாதார அமைச்சு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Related Posts

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15.06.2026) வடக்கு மாகாண...

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 15, 2026
0

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்...

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 15, 2026
0

பகுதியளவில் தீப்பரவல் ஏற்பட்ட லக்க்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆர்.பி.கே தோட்ட கம்பெனிக்கு உரித்தான மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!

by Mathavi
June 15, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும்...

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

by Mathavi
June 15, 2026
0

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

இராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 15, 2026
0

களுத்துறை - அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி...

ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!

ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!

by Mathavi
June 15, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

‘டித்வா’ புயல் பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்க தீவிரம்.!

‘டித்வா’ புயல் பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்க தீவிரம்.!

by Mathavi
June 15, 2026
0

'டித்வா' சூறாவளியால் நாட்டின் கல்வித்துறைக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக யுனிசெப் அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்...

சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகள்.!

சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகள்.!

by Mathavi
June 15, 2026
0

நாட்டின் சுகாதாரச் சேவையை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் போதியளவான மனித வளம் இல்லாமையே தற்போதைய பிரதான சவாலாகக் காணப்படுகின்றது என்றும், இதனால் சுகாதாரத்...

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி