• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகள்.!

Mathavi by Mathavi
June 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கைகள்.!
Share on FacebookShare on Twitter

நாட்டின் சுகாதாரச் சேவையை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் போதியளவான மனித வளம் இல்லாமையே தற்போதைய பிரதான சவாலாகக் காணப்படுகின்றது என்றும், இதனால் சுகாதாரத் துறையில் நீண்டகாலமாக வெற்றிடமாக உள்ள பிரிவுகளுக்கான புதிய நியமனங்களை வழங்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.

பேராதனை போதனா மருத்துவமனையில் 92 மில்லியன் ரூபாய் செலவில் நவீன உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரதான மருத்துவ ஆய்வகம் ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“சுகாதாரத் துறையில் கடந்த அரசுகளினால் அரைகுறையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநடுவே கைவிடப்பட்ட அனைத்து மருத்துவமனை அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பித்து நிறைவு செய்வதற்காக, இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தரமான சுகாதாரச் சேவையைப் பொதுமக்களிடம் தங்கு தடையின்றி கொண்டு சேர்ப்பதற்குத் தேவையான மனித வளத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தற்போது வெற்றிடமாக உள்ள அனைத்துத் துறைகளுக்கும் தகுதிவாய்ந்தவர்களை ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, முதற்கட்டமாகத் தகுதிவாய்ந்த தாதியர்களை அதிகளவில் பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கான புதிய நியமனங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சுகாதார சேவை நியமனங்களின் போது எவருக்கும் எவ்வித அரசியல் அநீதியும் இழைக்கப்பட மாட்டாது என்பதுடன், முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும்.

மேலும், நிதியமைச்சுடன் விரிவாகக் கலந்துரையாடி, சுகாதாரத் துறையின் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்கான முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட பேச்சுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

நவீன உலகிற்கு ஏற்ப, ஏழை எளிய மக்களுக்கும் உயர்தரமான இலவச சுகாதாரச் சேவையை வழங்குவதே எமது அரசின் முதன்மைக் குறிக்கோளாகும். அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளைப் பலப்படுத்துவதற்காகச் சுகாதார அமைச்சினுள் பிரத்தியேகமான தனிப் பணிப்பாளர் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.” – என்றார்.

Related Posts

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

மரை இறைச்சியுடன் இருவர் கைது.!

by Mathavi
June 15, 2026
0

பொகவந்தலாவ செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக வலை விரித்து மரையை கொன்று இறைச்சி விற்ற இருவர் பொலிஸாரிடம் சிக்கினர். பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை...

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

by Mathavi
June 15, 2026
0

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சி மற்றும் தொழிற்சந்தை இன்று திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் மன்னார் நகர மத்திய...

கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

தம்பதியினர் மர்மமாக உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 15, 2026
0

களுத்துறை - புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகலோயா பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றின் மேல் மாடியில் வசித்து வந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த...

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15.06.2026) வடக்கு மாகாண...

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

by Mathavi
June 15, 2026
0

வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்...

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 15, 2026
0

பகுதியளவில் தீப்பரவல் ஏற்பட்ட லக்க்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆர்.பி.கே தோட்ட கம்பெனிக்கு உரித்தான மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சுரேஷ் சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது.!

by Mathavi
June 15, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும்...

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

குற்றங்களை அடியோடு ஒழிக்க பொலிஸாரும் மக்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

by Mathavi
June 15, 2026
0

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண...

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

by Mathavi
June 15, 2026
0

இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

இராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 15, 2026
0

களுத்துறை - அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி