நடுவீதியில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி.!
நடுவீதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் மறே மஸ்கெலியா பிரதான சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் இடம்பெற்று உள்ளது.
இரத்தினபுரி பகுதியில் இருந்து மஸ்கெலியா மறே தோட்டத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த உறவினர்கள் நிகழ்வு முடிந்த பின்னர் மீண்டும் இரத்தினபுரி நோக்கி பயணித்த வேளையில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட பிரதான சாலையில் தடம் புரண்டதால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூன்று பெண்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனே அப் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவர்களில் மறே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏனைய இரண்டு பேரும் சிறு சிறு காயங்களுடன் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.