உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
21 பார்வைகள்

புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information Centre – MIC) வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை வாழ் பொதுமக்கள் புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது சட்டவிரோதம் அற்ற பாதுகாப்பான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று சனிக்கிழமை (13) மருதமுனை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

சுவிட்ஸர்லாந்து நாட்டின் அனுசரணையோடு நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் சேவைகள், முறையற்ற விதத்தில் மேற்கொள்ளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயணங்களின் போது ஏற்படும் இடையூறுகள், பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை அறிந்து கொள்வது மற்றும் பாதுகாப்பான புலம்பெயர் பயணங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு சட்டவிரோதமான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்கள் ஊடாக பொதுமக்கள் மற்றும் தனி நபர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிரி வால்ட் (Dr. Siri Walt) கலந்து கொண்டு புலம்பெயர் தகவல் மையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்படுகின்ற தனிநபர் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

நிகழ்வின் போது புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனத்தின் இணைப்பாளர் சமீர் சாலிஹ், ஆலோசகர் சுமித்ரா சதாசிவம் ஆகியோர் சட்டரீதியான முறையான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0