• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு.!

Mathavi by Mathavi
June 10, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு.!
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற நேரத்திலே அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளையும் இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

சிறைச்சாலைகளிலே இவர்கள் குறிப்பிடும் விதமான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகள் மாத்திரம் சில வரப்பிரசாதங்களைக் கேட்டு அங்கே உண்ணாவிரதம் இருப்பதும், தங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் இங்கே யாருக்கும் விசேடமான எந்த ஒரு வசதியும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளும் புனரமைப்பதற்கான நிதி உதவிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான, புனரமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.

முட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜே. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சரின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பீதாம்பரம் வாலசஸ்ரீதரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 ஆலயங்களை சுத்தம் செய்வதற்காக 25000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டதுடன் புனரமைப்பு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாய் 13ஆலயங்களுக்கும் ஒரு ஆலயத்திற்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
இந்த நாட்டிலே போதை கலாச்சாரம் என்பது உருவாகிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, அரசாங்க ரீதியிலே நாங்கள் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து விதமான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற அதே வேளையிலே, பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை மீட்டெடுப்பதற்காக அவர்களுக்கான புனர்வாழ்வு வழங்குவதற்கான விடயங்களையும் நாங்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.

உங்களுக்குத் தெரியும் இந்த போதை, ஆக மோசமானது. இந்த போதை பாதிப்பிலிருந்து இளைஞர், யுவதிகளை மீட்டு விடுவதற்காக இந்த மதஸ்தானங்களின் ஊடாக, உங்களது ஒத்தழைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

அதனைப் போன்று இன்று கொழும்பில் கூடுதலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலே அன்று பாதிக்கப்பட்ட தரப்பினருடன் அந்தத் தாக்குதலிலே சம்பந்தப்பட்ட தரப்பினர்களை இனங்காண்பதற்காக விசாரணைகள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையிலே, அந்த விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற இந்த நேரத்திலே எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், விசேடமாக ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இன்று அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளை இப்போது முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

கடந்த காலங்களிலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என பலவிதமாக கோரிக்கை முன்வைத்தவர்கள், இந்த ஆட்சியாளர்கள் விசாரணைகளை முன்வைக்க மாட்டார்கள், விசாரணை செய்ய மாட்டார்கள் என்று குறிப்பிட்டவர்கள், இன்று அந்த விசாரணையை குழப்புகின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் இப்போது குறிப்பிடுகின்றார்கள் நாங்கள் இந்த விசாரணையை முன்னெடுத்திருப்போம், எங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கின்ற இந்த வேளையிலே இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் நாங்கள் சரியாக விசாரணை செய்து உரியவர்களுக்கு எதிராக தண்டனைகளை வழங்கியிருப்போம் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் இன்று அதை குழப்புகின்ற ஒரு செயல்பாடுகளையே அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

எதுவாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக இந்த உயிர் நீத்தவர்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தாங்கள் எதற்காக உயிர் நீத்தோம், ஏன் எங்களுக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றது என்பது கூட அறியாத ஒரு நிலைமை இன்று இருக்கின்றது.

அந்த நீதிக்காக எப்போதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்றிணைந்து நிற்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்பொழுதுமே நீதிக்கும் நேர்மைக்காகவும் மக்கள் நேயத்திற்காகவும் செயல்படுகின்ற ஒரு அரசாங்கமாக தொடர்ச்சியாக இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த விசாரணையின் போது பலவிதமான தரப்பினருக்கு நாங்கள் விசாரணையை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம். சில பேர் அரச சாட்சியாக மாறியிருக்கின்றார்கள். ஒரு சிலர் இன்னும் தொடர்ந்து விசாரணைக்காக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். நான் நினைக்கின்றேன் அந்த விசாரணை மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது. மிக நீண்ட காலமாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த விசாரணை நேர்மையாகவும் நீதியாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் குறிப்பிட்டிருந்தார்கள் நாங்கள் இதிலே எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, நாங்கள் உண்மையான நீதியானவர்களைத் தேடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இன்று அவர்களே அதற்கு எதிராக விசாரணையை குழப்பும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறைச்சாலைகளைப் பொறுத்தவரைக்கும் சிறைச்சாலைகளிலே சகலவிதமான வசதிகள், அடிப்படை வசதிகள் அந்த கைதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. சிறைச்சாலைகளிலே தேவையான அடிப்படை வசதிகள் உட்பட ஏனைய வசதிகள், சுகாதார வசதிகள் உட்பட அவர்களுக்கான மருத்துவ வசதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

உங்களுக்குத் தெரியும் ஒரு கைதி சுகயீனமுற்றிருந்தால் நேரடியாக உள்ளே இருக்கின்ற வைத்தியசாலையைப் பயன்படுத்தி அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படுகின்ற அதே நேரம், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அரசு வைத்தியசாலைகளுக்குச் சென்று அவர்களுக்கு சிகிச்சை வழங்குகின்ற ஒரு செயல்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது.

சிறைச்சாலைகளிலே இவர்கள் குறிப்பிடும் விதமான எந்த ஒரு நடவடிக்கையும் அங்கே இல்லை. சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. உங்களுக்குத் தெரியும் பல போதை குற்றச்சாட்டுகளோடு சம்பந்தப்பட்டவர்கள் கூட இன்று சிறைச்சாலைகளிலே தான் இருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் மாத்திரம் சில வரப்பிரசாதங்களைக் கேட்டு அங்கே உண்ணாவிரதம் இருப்பதும், தங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் இங்கே யாருக்கும் விசேடமான எந்த ஒரு வசதியும் வழங்கப்பட மாட்டாது. அனைவருக்கும் வழங்கப்படுகின்ற அதே வசதிகள் தான் அவர்களுக்கும் வழங்கப்படும். ஆகவே அவர்கள் எதிர்பார்க்கின்ற கடந்த கால அரசாங்கம் கொடுத்த வசதிகளை இந்த அரசாங்கத்தில் அவர்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். சிறைச்சாலைகளில் சரியான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts

புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டம்!

புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டம்!

by selvan
June 10, 2026
0

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை உச்சநிலைக்குக் கொண்டு வருவதற்கு, எரிசக்திச் சேமிப்பு அமைப்புகள் (Energy Storage Systems) அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விரிவான விசாரணை!

யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விரிவான விசாரணை!

by selvan
June 10, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக...

சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற தேக்கம் பலகைகள் மீட்பு – சந்தேக நபருக்குப் பிணை!

சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற தேக்கம் பலகைகள் மீட்பு – சந்தேக நபருக்குப் பிணை!

by selvan
June 10, 2026
0

உரிய வழி தடை அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 100க்கும் அதிகமான தேக்கு மர பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்...

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம் – கொழும்பு சென்ற பணிப்பாளர்!

ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதாரத் தொண்டர்களது போராட்டம் – கொழும்பு சென்ற பணிப்பாளர்!

by selvan
June 10, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு- இருவர் கைது

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு- இருவர் கைது

by selvan
June 10, 2026
0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(5) முதல் திங்கட்கிழமை(8) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து...

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

by selvan
June 10, 2026
0

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்(10.06.2025) காலை...

போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட மூவர் கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட மூவர் கைது!

by selvan
June 10, 2026
0

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒரு தம்பதியினரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு...

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக.!

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக.!

by Mathavi
June 10, 2026
0

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்.!

by Mathavi
June 10, 2026
0

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது....

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.!

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.!

by Mathavi
June 10, 2026
0

உலக பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் யூன் 6 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி