பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், உக்ரைனின் மார்தா கொஸ்டியூக்கை (Marta Kostyuk) வீழ்த்தி ரஷ்யாவின் இளம் வீராங்கனை மீரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில், தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரீவா, 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் கொஸ்டியூக்கை தோற்கடித்தார்.
இதற்கமைய, இறுதிப் போட்டியில் அவர் தனது சொந்த நாட்டு வீராங்கனையான டயானா ஷ்னைடர் (Diana Shnaider) அல்லது போலந்தின் மாயா ச்வலின்ஸ்கா (Maja Chwalinska) ஆகிய இருவரில் ஒருவருடன் மோதவுள்ளார்.
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டு வீரர், வீராங்கனைகள் பின்பற்றி வரும் வழக்கத்தின்படி, கொஸ்டியூக் போட்டிக்கு முன்னதாக தனது எதிர்த்தரப்பு வீராங்கனையுடன் பாரம்பரியமாக எடுக்கப்படும் புகைப்படத்திற்கு தோன்றுவதைத் தவிர்த்தார்.
அத்துடன், போட்டிக்கு முன்னரோ அல்லது பின்னரோ வலைக்கு அருகில் கைகுலுக்குவதையும் அவர் தவிர்த்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.










