களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், சடலமாக மீட்கப்பட்டவரின் அடையாள விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
தோற்றம்: சுமார் 05 அடி 06 அங்குலம் உயரமுடையவர்.
ஆடை: சிவப்பு நிற அரைக்கைச் சட்டை அணிந்துள்ளார்.
தலைமுடி: கறுப்பு மற்றும் வெள்ளை நிறக் கலப்பில் (நரைமுடி) சற்று நீளமாக வளர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
கடற்கரையில் சடலமொன்று கரை ஒதுங்கிக் கிடப்பதைக் கண்ட பிரதேசவாசிகள், அது குறித்துக் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அவசரத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்தவர் குறித்த ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் உடனடியாகக் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்










