கரடியனாறு பொலிஸ் சிறைக்கூடத்தில் உயிரிழந்த கைதி கசிப்பு வழக்கில் கைதானதாக தகவல்!
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொலிஸ் சிரைக்கூடத்தில் உயிரிழந்த நபர் சாட்டவிரோத மதுபான வழக்கில் கைதானவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என்பவரே இவ்வாறு சிறைக்கூடத்தில் உயிரிழந்தவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் சந்தேகநபரைக் கரடியனாறு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறைக்கூடத்துக்குள் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.