• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

selvan by selvan
May 23, 2026
in இந்திய செய்திகள்
0
இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் லீற்றரொன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான தொகையை உயர்த்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில், கடந்த 10 நாட்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்படி, தலைநகர் புதுடெல்லியில் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 87 சதத்தினால் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 51 சதமாகவும், டீசல் லீற்றரொன்றின் விலை 91 சதங்கள் உயர்த்தப்பட்டு 92 ரூபாய் 49 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஒரே வாரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்றாவது உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முறைக்கான 2 ரூபாய் விலை குறைப்பைத் தவிர, இந்தியாவில் எரிபொருள் விலைகள் பெருமளவில் மாற்றமின்றி ஸ்திரமாகவே காணப்பட்டன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட கொந்தளிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக இந்தியன் ஆயில் கோர்ப்பரேஷன் உள்ளிட்ட அரச எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் தினசரி விலை திருத்த நடைமுறையை 2022 இல் நிறுத்தி வைத்திருந்தன.

இருப்பினும், தற்போதைய போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் சராசரியாக ஒரு பீப்பாய் 69 டொலராகக் காணப்பட்ட இந்தியாவின் மசகு எண்ணெய் கொள்முதல் விலை, சமீபத்திய மாதங்களில் 113 முதல் 114 டொலர் வரை உயர்ந்துள்ளது.

இந்தியா தனக்குத் தேவையான மசகு எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை இறகுமதி மூலமே பூர்த்தி செய்வதனால், சர்வதேச சந்தையின் இந்த விலை மாற்றங்கள் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

தமிழக முதல்வர் விஜய் மீண்டும் டெல்லிக்கு பயணம்!

by selvan
June 10, 2026
0

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே மாதம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

by selvan
June 10, 2026
0

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று...

ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய அரசு தனது குடிமக்களுக்கு உத்தரவு!

ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய அரசு தனது குடிமக்களுக்கு உத்தரவு!

by selvan
June 9, 2026
0

ஈரான் – இஸ்ரேல் இடையே மீண்டும் போர் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் ஈரான் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானின் எச்சரிக்கையை...

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

by selvan
June 5, 2026
0

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள்...

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

by selvan
June 5, 2026
0

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை இராஜினாமா செய்ததை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின்...

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

by selvan
June 5, 2026
0

டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என...

தமிழ்நாட்டிற்கான நிதி  குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

by selvan
June 4, 2026
0

125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது...

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

by selvan
June 4, 2026
0

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கர்நாடக...

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!

by selvan
June 4, 2026
0

வட பீகாரில் உள்ள முசாஃபர்பூரின் பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்று (04) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்...

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

by selvan
June 3, 2026
0

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி